Latest News  

கல்வி வளர்ச்சி நாள் - 2024

கல்வி வளர்ச்சி நாள் - 2024

கடலூர் சின்ன கங்கணாங்குப்பத்தில் உள்ள இம்மாகுலேட் மகளிர் கல்லூரியில் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு கல்லூரியின் செயலர் அன்னை நிர்மலாராணி அவர்கள் தலைமையில் கல்லூரி முதல்வர் முனைவர் சு.சுசிலாதேவி அவர்கள் முன்னிலையில் இவ்விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கடலூர் மண்ணின் மைந்தன் பன்னாட்டு அளவில் விருதுகள் பல பெற்ற தமிழறிஞர் கவிஞர் சீனு .செந்தாமரை அவர்கள் கலந்துக் கொண்டார். பெருந்தலைவர் காமராஜரின் அற வாழ்க்கை குறித்தும் கல்வி என்பது மனிதனை முழுமையாக்கும் என்பதனால் ஒவ்வொரு இந்திய குடிமகனும் கற்றலை போற்றி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சீரிய சிந்தனையை இந்த நன்னாளில் மாணவியர்களுக்கு வழங்கினார்.இனிதே இவ்விழாவானது நிறைவுபெற்றது.

Online Fee