Latest News  

பாரதியாரின் நினைவு நாள்

பாரதியாரின் நினைவு நாள்

கடலூர் சின்னகங்கணாங்குப்பம் இம்மாகுலேட் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக தமிழினி சங்கம் பாரதியாரின் நினைவு நாளை 11 .9. 2024 அன்று சிறப்பாக கொண்டாடினர். தமிழும் பாரதியும் என்ற பொறுமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. செயலர் அன்னை அவர்களின் அனுமதி பெற்று தமிழ்த்துறை தலைவர் அவர்களின் தலைமையில் பாரதியாரின் நினைவு நாளை தமிழ்த்துறை மாணவியர்கள் சிறப்பாக செயல்படுத்தினார். இந்நிகழ்வானது இறைவணக்கத்துடன் தொடங்கியது. பாரதியாரின் நாட்டுப்பற்றையும் மொழிப்பற்றையும் அவர் படைத்த கவிதை இணையும் இன்று வரை எல்லோராலும் போற்றப்படுகிறது என்ற நற்பல செய்திகளை துறைத்தலைவர் அவர்கள் எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் முதலாம் ஆண்டு மாணவி கிருத்திகா அவர்கள் பாரதி பற்றிய தனது சொந்த கவிதையினை சிறப்பாக வாசித்தார் மேலும் பாரதியார் பற்றிய உயர்வினை எடுத்துரைக்கும் வகையில் முதலாம் ஆண்டு மாணவி பிரியதர்ஷினி அவர்கள் தனது கருத்துக்களை முன்மொழிந்தார் இம்மாணவியர்களின் படைப்புத்திறனை சிறப்பித்து அவர்களுக்கு பேராசிரியர் விஜியலட்சுமி அவர்களை பாராட்டினார். இறுதியாக நாட்டுப்பண்ணுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

Online Fee