Latest News  

Pattimandram

Pattimandram

இம்மாகுலேட் மகளிர் கல்லூரியில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு "தமிழினி சங்கம்"சார்பாக தமிழ்த்துறையில் இன்று (14.8.24) விடியல் மலர்ந்ததா? மறைந்ததா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.இதில் தமிழ்த்துறை பேராசிரியர் கா.அன்னபூரணி நடுவராகவும், கல்லூரி செயலர் முனைவர். அருட்சகோதரி நிர்மலா தலைமையிலும், முதல்வர் முனைவர் மு.சுசீலாதேவி முன்னிலையிலும், துறைத்தலைவர் முனைவர் த.தீபா ஒருங்கிணைப்பாளராகவும் விழாவினை சிறப்பித்தனர்.பட்டிமன்றத்தில் தமிழினி சங்கத் தலைவர் இரா. சிவகாமி மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள் வழிகாட்டுதலின் படி விடியல் மலர்ந்தது என்ற தலைப்பில் தமிழ்த்துறை மாணவிகள் மு. ஹஃபிசா,அ. மெர்சி ஏஞ்சல்,செ. ஜெயசூர்யா ஆகிய மாணவிகள் தம் கருத்தை முன் வைத்தனர். விடியல் மறைந்தது என்ற தலைப்பில் கா.பிரியதர்ஷினி,ரா நர்மதா, தேவதர்ஷினி ஆகிய மாணவிகள் தம் கருத்தை முன்மொழிந்தனர். இறுதியாக நடுவர் கா. அன்னபூரணி அவர்கள் இறுதி தீர்ப்பினை வழங்க இவ்விழா இனிதே நிறைவுற்றது.

Online Fee